Sunday, December 28, 2008

பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சு

இராகு , கேதுவை பற்றி ஆராந்தபின்புதான் நான் ஜோதிடத்தையே நம்ப ஆரம்பித்தேன்.
சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது , கனத்த அனுக்களெல்லாம் மையம் நோக்கி செல்லும்.இந்த அழுத்தம் காரணமாக அணுசிதைவு ஏற்பட்டு அவை மேலும் நெருக்கமுற்று சக்திவாய்ந்த காந்தக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதன் ஈர்ப்பு சக்தி பயங்கரமானது, ஒளியை கூட இழுத்துவிடும். ஒரு பொருளின் மீது ஒளி பட்டு திரும்பி வந்தால் தானே அது நம் கண்ணுக்கு தெரியும். அதனால் தான் இந்த கரும்புள்ளி (பிளாக் ஹோல்) கண்ணுக்குத் தெரியாது என்று விஞ்ஞானி ஸ்டிபன் ஹாகிங் கூறுகிறார்.
மேலும் அழுத்தம் அதிகரிக்கும் போது , இந்த கரும்புள்ளி சூரியனில் இருந்து இரண்டு காந்த அலை பாதைகளாக வெளியேரும் அது தான் ஒருபுறம் ராகு என்றும் மறுபுறம் கேது என்று சொல்கிறார்கள்.


எந்த ஜாதகத்திலும் போய் பாருங்கள் ராகு,கேது நேர் எதிராக தான் இருக்கும்.




இந்த ராகு , கேது காந்த அலைபாதைகளில் பூமியும், சந்திரனும் ஒரு நேரத்தில் வரும்போது கிரகணம் ஏற்படும்.அந்த காலத்தில் பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சுனு சொன்னாங்க அது வேற ஒன்னும் இல்ல இந்த காந்த அலை பாதையை தான் சொன்னாங்க. அலைபாதைத்தான் பாம்பு என்று சொன்னார்கள். பாம்பு போலத்தானே இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் சூரியன்,பூமி , சந்திரன் நேர் கோட்டில் வரும் அப்போதெல்லாம் கிரகணம் வராது.சூரியனிடம் இருந்து வரும் காந்த அலை பாதையும் அதே நேர்கோட்டில் இருந்தால் தான் கிரகணம்.

உண்மையை சொல்லியிருந்தால் அந்த காலத்தில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.இப்படி சொன்னதால் தான் பல தலை முறை தாண்டியும் அறிவியல் வந்து சேர்ந்திருக்கு. ஒவ்வொரு தலைமுறையிலும் சில மனிதர்கள் இந்த உண்மையை உணர்ந்திருப்பர்....

Saturday, December 27, 2008

குங்குமம்

அந்த காலத்தில் ஆண்கள் தவம் செய்ய வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண்களுக்கு வாய்ப்புக் குறைவு.
ஆண்கள் பல வருடம் தவம் செய்து தங்களது மனதை நெற்றிப் பொட்டில் (ஆகினை ) நிறுத்துவார்கள்.நெற்றிப் பொட்டில் நினைவு இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் காஸ்மிக் அலை உடம்பில் புகும்.ஆற்றலை தரும், ஞானத்தை தரும்.





பெண்கள் பொட்டு வைப்பதால் சில நாளிகை அவர்கள் நினைவு நெற்றிப் பொட்டில் இருக்கும் அவர்களுக்கும் ஆற்றல் கிடைக்கும்.

Saturday, November 29, 2008

செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோஷம் என்பது தம்பதிகளுக்கு இரத்த பிரிவுகள் ( blood group ) பொருத்தத்தை குறிக்கிறது.

ஆண்,பெண் இருவருக்கும் (Rh) +ve அல்லது இருவருக்கும் -ve ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்.

உதாரணத்திற்கு, -வ் பிரிவை சேர்ந்த பெண்ணுக்கும் , +வ் ஆணுக்கும் , பிறக்கும் குழந்தை +வ் ஆக உள்ள போது , குழந்தையில் இரத்ததில் உள்ள +வ் body , குழந்தை பேறு காலத்தில் ரிட்டன் ஆகி தாய்க்குச் சென்றுவிடும். இதன் விளைவாக தாய்க்கு அடுத்த சேய் தோன்றாமல் கருச்சிதைவு ஏற்படும்.
இதற்காக தாய்க்கு anti body injection போட்டு விடுவார்கள்.........


செய்வாய் தோசம் + - பொருத்தத்தை பார்க்கிறது அவ்வளவு தான்......
ஜாதகம் பார்த்தால் இந்த +/- விபத்து தவிர்க்கப்படும்.......

இரத்த பரிசோதனை செய்யாமலேயே நம்ம முன்னோர்கள் செய்த ஏற்பாடு தான் இது.....

கந்தனுக்கு அரோகரா!

பழனியில் முருக பெருமானின் சிலை நவபாஷானத்தால் போகர் செய்தார்.
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

http://www.newtirupurlodge.net/images/muruga_bhogar.gif


இந்த நஞ்சு பொருட்களை நேரடியாக சாப்பிட்டால் உடனே சிவலோகம் செல்லலாம். ஆனால் மிகக் குறைவாக சாப்பிட்டால் தொழு நோய் உட்பட பல நோய்கள் தீரும்.
பஞ்சாமிருதம் அமில தன்மை உடையது, அமிலமோ அரிக்கும் தன்மை உடையது.
அபிஷேகம் செய்யும் போது பஞ்சாமிருதம் சிறிது அளவு நவபாஷானத்தை கரைத்துவிடும்.
அந்த பஞ்சாமிருதம் உண்ணும் போது சிறிதளவு நவபாஷானம் உள்ளே போகும்.

நோயும் ஒரே ஓட்டமாக ஓடி போகும்.

கார்திகை மாதம் விளக்கு ஏற்றுவது எதற்கு?

கார்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு வைப்பது வழக்கம்.
மழை காலத்தில் மாலை நேரத்தில் மழையால் அடித்து கொண்டு வரும் பாம்பு போன்றவை வீடுகளில் ஒதுங்க நினைக்கும். விளக்கு வெளிச்சம் இருந்தால் அவை வராது. வந்தாலும் வெளிச்சத்தில் தெரியும். தெரு விளக்கு இல்லாது காலத்தில் நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு இது.
http://vasudev1954.sulekha.com/mstore/vasudev1954/albums/default/k1.bmp

பரமாத்மா என்ற கடவுள் பெரும் ஜோதி , அதில் இருந்து ஏற்றப்பட்ட அகல் மாதிறி நாமெல்லாம் சின்ன சின்ன ஜோதிகள் என்ற உணர்வோடு நாம் விளக்கு ஏற்ற வேண்டும்.